மே ஒன்பதாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!

723 0

மே ஒன்பதாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!
*******
பன்னாட்டு அரசாரிடம் போராயுதம் பல வாங்கித்
தன்நாட்டு மக்களையே தாராள வதம் செய்ய…
முன்னேறி வந்தபடை மூர்க்கத்தின் முகம் கொண்டு
தன்னாசை தீர்த்ததே என்னதான் நாம் செய்வோம்!

ஓயாத அலைகொண்ட மண்மீட்புப் படலத்தில்
ஆனையிறவுக்கு அப்பாலும் யாழ் நோக்க…
நாற்பத்து ஐயாயிரம் நாசப் படைகளை
காக்கத் துடித்த உலகப் பேருயர் ஜனநாயகமே..

பல லட்சம் மக்களிங்கே உயிர்வதையில் உழல்கையிலே
இனவாதச் செயலுக்கு ஈனக் கரங்கொடுத்துப்
பழிவாங்கும் படலமென்றா இழிவான இச்செயலில்
துளிகூட இரங்காது துணைபோனாய் காந்தியமே!

இதை யார் கண்டார்? யார் கேட்டார்?

மே ஒன்பதாம் நாள் நினைவில் முள்ளிவாய்ககால்.

-வன்னியூர் குரூஸ்-