பந்துல குணவர்த்தனவின் கருத்தினை மறுத்தார் மனோ கணேசன்!

287 0

சிறிலங்கா  பிரதமருடனான அலரி மாளிகை சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாமை குறித்து, அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்த கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘டயஸ்போராவின் அழுத்தத்தினாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்கட்சி, பிரதமர் மகிந்தவின் கூட்டத்துக்கு வரவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன கூறுகிறார்.

எந்த டயஸ்போரா பந்துல? தமில் டயஸ்போராவா? அப்படியானால், இந்த தமிழ் டயஸ்போராவினால் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்துக்கொள்வதை நிறுத்த முடியவில்லையே. ஆனால், எங்களை நிறுத்தி விட்டதோ? கொரோனாவினால் சோர்வடைந்துள்ள மக்களுக்கு நண்பர் பந்துல, நல்ல ஒரு கோமாளியாக சிரிப்பு மூட்டுகிறார்.

முதலில் கூட்டத்துக்கு, நம்பி வந்த கூட்டமைப்பின் கோரிக்கைகளில் எதையாவது கொடுக்க, ஜனாதிபதி, பிரதமரிடம் சொல்லி வழி பாரப்பா!’ எனவும் தெரிவித்துள்ளார்.