சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரிப்பு

350 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் வெளிவந்த அறிவிப்பில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 215 பேர் குணமடைந்துள்ள நிலையில் 571 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை  9 மரணித்துள்ளனர்.