இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

323 0

நாடளாவிய ரீதியில்  இன்று (06) இரவு 8.00 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமலாகும் ஊரடங்கு மே மாதம் 11 ஆம் திகதி  அதிகாலை 5.00 மணிவரை அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகள் 11 ஆம் திகதி முதல் இயல்பு நிலைக்குத் திரும்புமென தெரிவிக்கப்படுகிறது.