இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் – டொனால்டு டிரம்ப்

280 0

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டிவிட்டது.
அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷிய டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தாமதமின்றி விரைவிலேயே தடுப்பூசி வந்து விடும் என கூறினார்.