மே மூன்றாம் நாளில் முள்ளிவாய்க்கால்!

482 0

மே மூன்றாம் நாளில் முள்ளிவாய்க்கால்!
******* ****

உலகஆயுதங்களை ஒருமித்து அள்ளிவந்து
முள்ளிவாய்க்கால் எல்லைக் கோடுகளை எட்டிநின்று
தலைகளால் மட்டும் நிறைந்திருந்த அத் தரையெங்கும்
குண்டுகளைக் கொட்டிச் சிங்கப்படை உயிர்வதை செய்தது…!

ஓயாத அலைகளால் ஒருலட்சம் படைகளை
ஓடவைத்த ஒப்பற்ற மறவர்படை அழிக்க
உலகத்தோடு துரோகத்தையும் அணைத்துவந்து
கொலைத் திருவிழாவை நடத்திக்கொண்டிருந்தது…!

எறிகுண்டு வந்து எங்கு விழுந்தாலும்
அப்பகுதியெங்கும் ஒப்பாரியும் ஓலமும்தான்…!
நிலமை மோசமாகிக்கொண்டிருக்க
உயிர்கள் நாசமாகிக்கொண்டிருந்தது

யார் கண்டார் ? யார் கேட்டார்?
இது மே மூன்றாம் நாளில் முள்ளிவாய்க்கால்.

-வன்னியூர் குரூஸ்-