சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது-சிறிலங்கா பொலிஸ்

345 0

சிறிலங்கா  முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என சிறிலங்கா பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரையான கலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.