65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம்!

335 0

குற்றக்கோவை தண்டனைச்சட்டத்திற்குட்பட்ட 33 குற்றச் செயல்களுக்கு புறம்பான குற்றச் செயல்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை 7 ஆம் திகதி வெசக் போயா தினத்தன்று இந்த கைதிகளை விடுதலை செய்ய இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் எம்.ஜி.டப்லியூ.தென்னகோன் தெரிவித்தார்.

இதைத்தவிர பிணை செலுத்த முடியாமல் இருக்கும் சிறு குற்றங்களை புரிந்த கைதிகளையும் விடதலை செய்ய இருப்பதுடன்இ இன்னும் சில கைதிகளுக்கு மன்னிப்புக்காலம் வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.