சிறிலங்காவில் மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

284 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ள மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளதாகவும் 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 705 பேர் இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மற்றும் 12 பேர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.