சிறிலங்காவில் பூரண குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா

344 0

சிறிலங்காவில் ஜா – எல கபாலாகந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான நபர் பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்ற ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இத்தாலியில் இருந்து வருகை தந்த ஒருவருடன் நெருங்கிய உறவை பேணிய ஒருவரே மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் கடந்த 16 ஆம் திகதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றிருந்தார்.

அவ்வாறு சென்ற அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.