மே முதல் நாள் முள்ளிவாய்க்கால்.

630 0

மே முதல் நாள் முள்ளிவாய்க்கால்.
*******

இனவெறி அரசின் ஆட்சிப்பீடம் ஆடும்
தமிழின அழிப்பின் அவலங்களில்….
தொடர் கால ஓட்டத்தில் இன்றுமாக
ஈழத்தமிழினம் இழந்தவைகள் ஏராளம்!

தாய்நிலம் தாண்டிய தமிழனின் இருப்பில்…
வரும்துயர் தாங்கிய தத்தம் வாழ்வியலில்…
உயிராய், உடமையாய், வளமாய், வாழ்வாய்
இன்னும் பலதாய் நாம் இழந்தவை ஏராளம்!

மே முதல் நாளதாம் தொழிலாளர் நாளன்றும்…
உலகம் கொடியேந்தி ஊர்வலங்கள் செல்ல…
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அழிவுகளின் நடுவே…
உயிரைப் பிடியேந்தி ஊரடங்கி அழுதோம்!

யார் கண்டார்….?
யார் கேட்டார்…?
இது மே முதல் நாள் முள்ளிவாய்க்கால்.

– வன்னியூர் குரூஸ் –