பன்னாட்டு தொழிலாளர் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

520 0

இன்றும் தொழிலாளர்கள் அடக்கப்பட்டு அரசியல் வாதிகளால் கொண்டாடப்படுகின்ற தொழிலாளர் தினத்தால் எங்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அந்தவகையில்தான் பன்னாட்டு ரீதியாக தொழிலாளர் தினத்தில் இன்றும் தொழிலாளர் வர்க்கம் தங்கள் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர்.

ஆனால் இம்முறை உலகமே கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் ஆழமாக மூழ்கியுள்ளது. இன்றுவரை ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 50000 மக்களுக்கும் மேலாக இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லா கண்டங்களிலும் நிலைமை சோகமானதாக உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உயிர் பலி கொடுத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மில்லியன் கணக்கான மக்கள் பதட்டத்துடனும் அச்சத்துடனும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் ஒற்றுமையையும் தொழிலாளர் தின வாழ்த்துகளையும் இதன் வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏகாதிபத்திய மற்றும் பேரினவாத அரசுகள் இந்த தொற்றுநோய் சூழலை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன அல்லது அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றன. பல அரசாங்கங்கள், கொரோனா வைரஸைப் பயன்படுத்தி, ஜனநாயக மற்றும் தொழிற்சங்க உரிமைகளை தடைசெய்கின்றன. தொற்றுநோய் சூழலின் காரணமாக சுதந்திரங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சிங்கள பேரினவாத அரசும் தமிழ் பிரதேசங்களில் பல அடக்கு முறைகளை செய்துகொண்டிருக்கின்றது. எங்களை கேட்காமல் எங்களுடைய பிரதேசங்களை அகலக்கால் வைத்து எங்கள் வளங்களை சுரண்டி எங்களுக்கு கிடைக்க வேண்டிய வழங்களை அபகரித்து கொள்கின்றனர்.தொற்றுநோய் சூழலை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழர் தேசத்தில் நெருக்கமான மக்கள் வாழ்விடங்களில் ராணுவத்திற்கான தனிமைப்படுத்தல் முகாம்களை அமைத்து மேலும் ராணுவமயமாக்கலை முன்னெடுத்துவருகின்றது.கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து வறிய தினக்கூலி மக்களுக்கு எந்தவிதமான இடர்கால நிவாரணமும் பெரிய அளவில் அரசால் செய்யப்படவில்லை.

தொழிலாளர்கள் தொற்றுநோய்களின் முன் வரிசையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்கிறார்கள். சக்திவாய்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் தங்கள் வீடுகளில் ஒளிந்து கொண்டிருக்கையில், அடிமட்ட மற்றும் அறிவுசார் தொழிலாளர்கள் உணவு, மருந்து, போக்குவரத்து, துப்புரவு, தகவல் தொடர்பு, ஆற்றல் மற்றும் வாழ்க்கையை சாத்தியமாக்குவதற்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முன் வரிசையில் போராடி வருகின்றனர். ஏழை விவசாயிகள் பொருட்களின் உற்பத்தியைத் தொடர்வதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கின்றனர்.தொழிலாளர் வர்க்கத்தின் தார்மீக மேன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இம் மாதம் என்பது தமிழ் மக்களின் கறுப்பு மாதமாக, தொழிலாளர் தினம் எவ்வளவு ஒரு மேன்மை பொருந்தியதோ அதே போல் சர்வதேசத்திற்கு தமிழர் இன அழிப்புக்காக சென்ற ஒரு மாதம் தான் மே மாதம். மேமாதம் என்பது தமிழர்களின் ஒரு வலி நிறைந்த காலத்தில் அழியாத ஒரு நாளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விழித்தெழுவோம், ஒன்றுபடுவோம், எங்கள் உரிமைக்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம். வீதியில் இறங்கி போராட புறச்சூழல் இல்லாவிடிலும் டிஜிட்டல் வழியில் சமூகவலைத்தளங்களில் எமது உரிமைக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோம்.

ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி