மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 143 பேருக்கு பி. சி. ஆர் பரிசோதனை

363 0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோய் பரிசோதனையான பி.சி.ஆர் பரிசோனை கடந்த வெள்ளிக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டு போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

உலகளாவிய தொற்று நோயாக கொரோனா வைரஸ் என பிரகடனப்பட்ட பின் சுகாதார அமைச்சு முன் ஆயத்தங்கள் செய்துள்ளது.

இதற்கமைய கொரோனா முகாமைத்துவம் செய்யும் வைத்தியசாலையாக எமது வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டது.

இதற்கமைய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாவது மாடியில் கொரோனா தொற்று நோய்  பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதே கட்டிடத்தில் முதலாவது தளத்தில் விசேட ஒரு பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் முதலாவது மாடியிலுள்ள விசேட பிரிவுக்கு வரும் நோயாளர்களில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும்; நோயாளர்கள் பிரத்தியோக பாதையூடாக அழைத்து செல்லப்பட்டு இரண்டாவது மாடியிலுள்ள கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பரிசோதனையில்; கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் கொழும்பு ஜ.டி.எச் வைத்தியசாலைக்கு அல்லது வெலிசறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

அதேவேளை நோய் தொற்று அற்றவர்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப் படுத்தப்படுவார்கள் அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்து கண்காணி க்கப்பட்டுவருவருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று நோய் பரிசோதனையான பி.சி.ஆர் உபகரணம் நிர்மானிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதன் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை 143 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளோம் இதனிடையே திங்கட்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் 4 பேருக்கு நோய் தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் ஏனைய மூவரும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஜ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்  .

இதேவேளை இதுவரைக்கும் எமது வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோய் சந்தேகத்தில் 101 நோயாளர்கள்  அனுமதிக்கப்பட்டனர். அதில் 8 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் ஒருவர் சமூகத்தில் இருந்து வந்தவர் அவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

அதேவேளை ஏனையவர்கள் தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் இருந்து வந்தவர்கள் அவர்களும் உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.