யாழ்.நகரத்தில் கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு! எட்டுப் பேர் கைது!

334 0

யாழ்.நகரத்தில்  கடைகள் உடைக்கப்பட்டு  திருட்டு மாநகரில் வெவ்வேறு  இடங்களில் பெறுமதியான இலத்திரனியல்  பொருள்களைத் திருடியமை மற்றும்  திருடப்பட்ட பொருள்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் எட்டுப் பேர் யாழ்ப்பாணம் காவல் துறையால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து  திருடப்பட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் பொம்மை வெளி,  நாவாந்துறை மற்றும் கஸ்தூரியார்வீதி  ஆகிய இடங்களைச் சேர்ந்த 8சந்தேக நபர்களே நேற்று முன்  தினம்  ஞாயிற்றுக்கிழமை  காவல் துறையால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக உள்ள காணியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அந்தப்பணிகள் ஊரடங்கு நடை முறையால் இடை நிறுத்தப்பட்ட நிலையில் அங்குகாணப்பட்ட கட்டடப் பொருள்கள்,

ரில்லர்கள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர இலத்திரனியல் வர்த்தக நிலையங்கள் இரண்டில் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்று காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் திருட்டு மற்றும் திருட்டுப் பொருள்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ்8 சந்தேக நபர்கள் நேற்று முன் தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 10 லட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று   காவல் துறையினர்  கூறினர்.

யாழ்ப்பாணம் தலைமை காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத்பெர்னாண்டோ தலைமையில் சிறு குற்றப்பிரிவு காவல் துறை  அதிகாரி எம். எம்.ஆர்.சி. முனசிங்க மற்றும் காவல் துறை  உத்தியோகத்தர்கள் ஹர்சன், ஹபுலியட்ட,கவியரசன், ரஞ்சித், கிங்ஸ்லி, மரியசிறி, உபாலி, ரட்ணாயக்க,சுரேகா உள்ளிட்ட காவல் துறை  உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.