கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லொறிகளின் சாரதிகளுக்கு பி.சி.ஆர். சோதனை!

292 0

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தோருக்கு கொரோனா தொற்றைக்கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்  இடம்பெறுகின்றது. இந்தத் தகவலை யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி வந்த லொறிகளின் சாரதிகள்,உதவியாளர்களுக்கு நேற்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தால் இந்தச் சோதனைமேற்கொள்ளப்பட்டது.

நேற்று 30 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. மீண்டும் தொடர்ச்சியாக இந்த
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன-என்றார்.

கொழும்பு கொரோனா பரவல் அபாய வலயமாகக்காணப்படும் நிலையில் அங்கு சென்று வந்த
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லொறிச் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.