முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிப்போம் – ஞானசார எச்சரிக்கை

250 0

625-500-560-350-160-300-053-800-900-160-90இலங்கை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழித்து மாபெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவோம் என ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் எனப்படும் போதைப் பொருள் வர்த்தகர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் கிழக்கை மையமாகக் கொண்ட மூத்த முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரும், கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சியொன்றின் தலைவருமான இரண்டு அமைச்சர்கள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை காரணமாகவே டான் பிரியசாத் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் டான் பிரியசாத்தின் கைது நடவடிக்கை குறித்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையாக கொந்தளித்துள்ளார்.

இந்தநிலையில், தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துர் ராசிக்கை கைது செய்யத் தவறும் பட்சத்தில் மாளிகாவத்தை தொடக்கம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அழித்து பெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்த உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.