வட தமிழீழ தொழில் முயற்சியாளர்கள் தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டும்!

266 0

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (24) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்;

தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது அதிலும் வடக்கினை பொருத்தவரைக்கும் புதியதொழில் முயற்சியாளர்கள் தற்பொழுது உருவாகிக் கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இதன் காரணமாக அவர்களின் முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எனினும் அவ்வாறான முயற்சியாளர்கள் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம் தமது உற்பத்திகளை மக்கள் மத்தியில் சேர்ப்பிக்க முடியும் என்பதை ஆராய்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.