தேமுதிக தொண்டர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தீவிரமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக மக்களும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முக கவசம் அணிவது அவசியம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிந்து மொபைல் போனில் செல்பி படம் எடுத்து வாட்ஸ்அப் டிபியாக பதிவிட்டும் அதை ஸ்டேட்டஸ், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு, முக கவத்தின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே மாதம் 3-ந் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டி.பி.யாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

