217 தொழிற்சாலைகளின் பணிகள் மீண்டும் ஆரம்பிப்பு

260 0
நாடு முழுவதுமுள்ள 217 சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சாலைகளின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பரிந்துரைத்துள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அதன்படி, 217 தொழிற்சாலைகளில் 30,269 ஊழியர்கள் தற்போது பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 48 தொழிற்சாலைகள் மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் 35 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கொக்கல, சீதவாக்கபுர, ஹொரன, வகவத்த, வதுபிட்டிவல, மாவதுகம, பொல்கஹவேல, மல்வத்துஹிரிபிட்டிய, மிரிசவெல்ல மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளை இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் பேட்டைகள் அனைத்தும் பொது சுகாதார அதிகாரிகளால் தினமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவற்றில் முறையான சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அவர்கள் உறுதிப்படுத்துவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.