சிறிலங்கா தேர்தல் குறித்த வர்த்தமானி வெளியானது!

282 0

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்று(திங்கட்கிழமை) இரவு, குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலினை இந்த மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் திகதி குறிப்பிடப்படாது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவில், இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.