சிறிலங்காவில் மேலும் 24 பேருக்கு கொரோனா

389 0

சிறிலங்காவில்  மேலும் 24 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, பண்டாரநாயக்கபுர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்வர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன் அடிப்படையில்  சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 295 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 96 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.