அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு வணக்க நாள் யேர்மனி எசன்.

671 0

தமிழீழத் தாய் அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினமும் நாட்டுப்பற்றாளர் தினமும் இன்றாகும். யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் தூபியில் அன்னை பூபதியின் திருவுருவப் படத்ததுடன் யேர்மனியின்; மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் ஆகியோரின் திருவுருவப் படங்களும் வைக்கப்பட்டு தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
கொடிய கொரோனா வைரஸ்சின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யேர்மனிய சட்டங்களுக்கு மதிப்பளித்து பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடக் கூடாது என்பதற்கமைய தூபி அமைந்திருக்கும் யேர்மனி எசன் நகரத்தில் உள்ள இடத்தில் ஒருவர் அல்லது இருவராகச் சென்று அன்னை பூபதிக்கு வணக்கம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.