மின்சாரம், நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் திட்டம்

336 0

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேடசெயற்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, இலங்கை மின்சார சபை (மி.ச.) தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ.) நிறுவனங்கள் இணைந்து இந்த விசேட செயல்திட்டத்தை செயற்படுத்திவருகின்றது.