ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்

371 0

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்த உள்ளதாக சிறிலங்காவின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ரயிவே பொது முகாமையாளர் டிலாந்த பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல் ரயில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.