மட்டக்களப்பு மாவிலாந்துறை கிராம மக்களுக்கு பேர்லின் அம்மா உணவகம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தது.

989 0

15.4.2020 இன்று மட்டக்களப்பு மண்முனைப்பற்று செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 136 குடும்பங்களுக்கு தலா 1330 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை யேர்மன் அம்மா உணவகத்தால் வழங்கிவைக்கப்பட்டது. இதுவரையும் இக் கிராமத்திற்கு எந்த உதவி அமைப்புக்களும் வந்து தமக்கான உதவிகளைச் செய்யவில்லை என அக் கிராம மக்கள் கண்ணீர் ததும்பத் தெரிவித்தனர். உதவிகளை வழங்கிய யேர்மன் அம்மா உணவகத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்தும் யேர்மன் அம்மா உணவகத்தின் நிவாரணப் பணிகள் எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பிலேயே தொடர இருப்பதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளுக்காக யேர்மன் அம்மா உணவகம் 322.864.50 இலங்கை ரூபாய்களை முதற் கட்டமாக அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.