சங்கானையை சேர்ந்தவர் பிரான்சில் உயிரிழப்பு

372 0

 

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve saint georges இனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) இன்று (15/04/2020) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவர் வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச்சோலை மாணவிகளின் தந்தையாவார்.

முக்கிய குறிப்பு:
கடந்த வருடத்தின் இறுதியில் சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ், உலகின்  பல  வல்லரசு நாடுகளை  ருத்ர தாண்டவமாடி வரும் நிலையில் . சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு  தமிழர் தாயக பகுதிகளில் கொரோனா தொற்றுநோய் முகாம் அமைக்கப்பட்டு     தமிழ் மக்கள் மீது மீண்டுமொரு இனப்படுகொலை செய்து வருகிறது ,  மேலும் தமிழர் தாயக  பகுதியில்  அன்றாட வாழ்வாதாரம் நசுக்கப்படும் நிலையில் தகுந்த நிவாரணம் வழங்காமல் தமிழர்களை பசியால் கொலை செய்யும்    சிங்கள பேரினவாத அரசின் இத்தகைய தமிழினவழிப்பு போக்கிலிருந்து எமது  தாயக உறவுகளை காப்பாற்ற புலம்பெயர் உறவுகளால் தாயக மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றப்பட்டு வருகிறது.