சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் வடக்கு நோக்கி வருவது ஏன்?

397 0

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, நாளை ( 16) யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விவசாயம், தொழில்முயற்சிகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் உள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.