சிறிலங்காவின் நோர்வூட்டில் கடும் மழை – 126 பேர் பாதிப்பு

379 0

சிறிலங்காவின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 26 பேர் தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை குறித்த பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் சில சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை கிராம அதிகாரி செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

மேலும், மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மாலை பெய்வதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.