தென் தமிழீழத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட 24 பேர் கைது!

318 0

திருகோணமலை மற்றும் உப்புவெளி பகுதிகளில் பத்திரகாளி அம்மன் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட 24 பேர்   நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 6 ஆண்களும் 5 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் உப்புவெளி சிறிலங்கா காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் அமைந்துள்ள காயத்திரி பீட ஆசிரமத்தில் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்தி புதுவருட பூஜை வழிபாட்டுக்கு ஒன்று கூடிய பதின்மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என உப்புவெளி சிறிலங்கா காவல் துறையினர்  தெரிவித்தனர்.