முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி உயிரிழப்பு

282 0

மட்டக்களப்பு, கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொண்ட சிவநாதன் அருந்ததி (முன்னாள் போராளி சுதாமதி) நேற்று 11-04-2020 சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பில் சாவடைந்துள்ளார். மாங்குளம் பகுதியில்  03.02.1999 அன்று ஏற்பட்ட மோதலின் போது எறிகணை வீச்சுக் காரணமாக விழுப்புண் அடைந்தார்.

இவரது இறுதி நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

நீண்ட காலமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையினை சக்கர நாற்காலியுடனே வாழ்ந்து வந்தார்.

இவர் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பயனாளியாவார்.

இவருடைய கணவரும் ஒரு முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது (இவரும் ஒரு மாற்றுத் திறனாளி) இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் உண்டு. திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.