மானிப்பாயில் கொள்ளை!

322 0

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமையில் வசித்து வந்த 70 வயதுடைய மூதாட்டியின் வீட்டினுள்ளேயே இன்று அதிகாலை 2.00 மணியளவில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனிமையில் இருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரது வாயை மூடி காதில் இருந்த தோடு மற்றும் கையில் அணிந்திருந்த வளையல்கள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட நகை 06 பவுண் என மூதாட்டி தெரிவித்துள்ளார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.