உறவுகளை உண்மையாய் நேசிப்போராயின் வீடுகளில் இருப்போம்!

388 0

லண்டனில் #Covid19 தாக்கத்திற்குப் பலியான இலங்கைத் தமிழர் அமரர் குகபிரசாத் அவர்களின் மகளின் பதிவின் தமிழாக்கம் இது…

“நாங்கள் கவனமாக இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்தோம்… எங்கிருந்து அவருக்குத் தொற்றியது என்று தெரியவில்லை.

உலகில் கொரொனாவிக்குப் பலியானோர் எண்ணிக்கையில் அவரும் சேர்க்கப்படுகிறார். ” STAY AT HOME” என்று சொல்லப்படுவதில் அர்த்தம் இருக்கின்றது.

நாங்கள் அனுபவிக்கும் வலியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அவர் சிகிச்சை பெறும் போது கூட எங்களால் அவரைச் சென்று பார்க்க முடியவில்லை. இப்போது இறந்த பின்னர் அவர் உடலையும் கூட பார்க்க அனுமதியில்லை. அவர் மருத்துவமனையில் மூச்சுத்திணறலுடன் தனிமையிலேயே போராடினார்..

#Covid19 மிகக் கொடியது.. இந்த துர்பாக்கியமான நிலைமை எவருக்கும் வரக்கூடாது.. ”

உறவுகளை உண்மையாய் நேசிப்போராயின் வீடுகளில் இருப்போம்… வருமுன் காப்போம்