கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமாதாநகர் 75 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவி வழங்கல்.

380 0

03.04.2020 திகதி சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்டத்தின்
பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைமாதாநகர் கிராமத்தில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க 75 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில் மேற்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழஙகும் பணி தொடர்ச்சியாக இம்பெற்று வருகின்றது.
சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் வறுமையில் வசிக்கும் வறிய குடும்பங்களில் மோசமான நிலையிலுள்ள 75 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்ப்ட்டது.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு உதவிகளை வழங்கிய சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளுக்கும் இந்த உதவியைப் பெற்றுத்தந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.