யாழில் இன்று நடமாடும் வங்கிச்சேவை

253 0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையைக் கருத்திற்கொண்டு,  தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாணத்தில் நடமாடும் வங்கிச் சேவையினை முன்னெடுக்கவுள்ளது.

இதற்கமைய இன்று(சனிக்கிழமை) நடமாடும் வங்கிச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியூடாக இருபாலை, கோப்பாய், நீர்வேலி, புத்தூர், கைதடி ஆகிய பிரதேசங்களில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

எந்தவொரு வங்கிக் கிளை அட்டைகளையும் பயன்படுத்தி பயன்பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.