மன்னார் நீர் விநியோகம் 4 மணிநேரம் துண்டிப்பு!

219 0

மன்னார் பிரதேசத்தின் பிரதான நீர் விநியோகக் குழாய்களில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளப்பட உள்ளமையினால் நீர் விநியோகம் 4 மணிநேரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த நீர் விநியோக துண்டிப்பானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் இடம்பெறும் என பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.