யாழில் 197 பேர் விடுதலை

324 0

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறு குற்றங்களுடன் தொடர்புடைய 197 கைதிகள் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் 162 கைதிகள், கடந்த சில நாள்களில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றய தினம், 35 பேர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், மல்லாகம் நீதிமன்றம் ஆகியவற்றின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டனர்

இலங்கையில், கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழேயே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது