கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

270 0

வவுனியா மகாகச்சகொடி பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ; ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றுக்காலை காட்டு பகுதிக்கு சென்ற போது காட்டு விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் உடனடியாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவாதாக பொலிஸார் தெரிவத்தனர்.

மகாகச்சகொடி பகுதியை சேர்ந்த கருணாதாச (வயது 36) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். ; சம்பவம் தொடர்பில் மேலதிக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.