5, 8-ம்வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்- வேல்முருகன் வலியுறுத்தல்

232 0

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது குல கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது. இதனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது குல கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது. இதனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி. தேர்வில் முறைகேடு குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய்து அதனை முழுமையாக நாட்டுடைமையாக்க வேண்டும்.
இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு மக்களின் அனுமதியை பெற வேண்டியதில்லை என மத்திய அரசு கூறியிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்குரிய நிலங்களை கையகப்படுத்துவதில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.