மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் 2 நபர்களை மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (27) கைது செய்துள்ளனர்.
கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று சன்னார் பகுதிக்குச் சென்று 2 நபர்களை கைது செய்ததோடு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 70 கிலோ வல்லப்பட்டையினை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 21 மற்றும் 60 வயதுடைய 2 நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வல்லப்பட்டை பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.