ரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

246 0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா- சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவரது கருத்து மடத்தனமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

குறித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பிரதேச சபைக்கு முன்பாக ஒன்று கூடிய உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரே காரணம். குறித்த குப்பை மேடு இருப்பது தெரிந்தும் அதற்கு அருகே காணிகளை வழங்கி அந்த மக்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியவர் அவரே.

மேலும் குப்பை மேடு வந்த பின்னரே குடியேற்றங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். குப்பை மேட்டிற்கு அருகில் குடியேற்றத்தைச் செய்த நிலையில் இந்த ‘மடத்தனமான’ வார்த்தை அவருக்கேதான் பொருந்தும்.

எனவே அவரது கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” எனத் தெரிவித்தனர்.