யாழ்ப்பாணத்தில் ஹோலி பண்டிகை நடாத்த ஏற்பாடு!

267 0

holi-in-srilankaயாழ்ப்பாண மாநகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களை நினைவுகூரும் முகமாக கார்த்திகை மாதம் தமிழ்மக்களின் உணர்வுபூர்வமான மாதமாகவும், இம்மாதத்தில் களியாட்ட நிகழ்வுகள் எதனையும் தமிழ் மக்கள் கொண்டாடாது தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி ஹோலிப் பண்டிகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் தமது கவலையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தத்தொடங்கினர்.

இதனால், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்து, ஹோலி களியாட்ட நிகழ்வுக்கும் இந்தியத் துணைத் தூதரகத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லையென இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜா தெரிவித்துள்ளார்.