சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

344 0

31031தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது இராணுவத்திற்கும் வாள்வெட்டுக்குழுக்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என ஊடகவியலாளர் கேள்ளி எழுப்பியபோது பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற வாள்வெட்டுக் குழுக்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாக மக்களிடம் அபிப்பிராயம் காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.