இலங்கை கடற்படையினர் மீது குற்றச்சாட்டு

470 0

Fishing_CIஇலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்களை எச்சரித்த இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து வீசியதுடன் அவர்களை விரட்டியடித்தததாகவும் கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்றவேளையில் 537 படகுகளில் 2148 தமிழக மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த செய்தி தொடர்பில் இன்னும் இலங்கை கடற்படை தரப்பில் இருந்து பதில்கள் எவையும் வெளியாகவில்லை.

Leave a comment