50 அடி பள்ளத்தில் குடை சாய்ந்த லொறி; இருவர் படுகாயம்

398 0

நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கிப் பயணித்த லொரி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் டெவன் பகுதியில் வைத்தே, குறித்த லொரி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பொரியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லொரியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.