அர்ஐ_ன் மகேந்திரன் நாடு திரும்பினார்

319 0

arjun01தனிபட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கபூர் சென்றிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஐ_ன் மகேந்திரன் இன்று மீண்டும் நாடு திரும்பினார்.

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அர்ஐ_ன் மகேந்திரன் சிங்கபூர் சென்றிருந்தார்.

கோப் குழுவின் அறிக்கை, அர்ஐ_ன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தியிருந்த நிலையில், அவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.

எனினும் அதற்கு பதில் வழங்கிய பிரதமர், அர்ஐ_ன் மகேந்திரன் திருமண வைபவம் ஒன்றின் பொருட்டே வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே, இன்று பிற்பகல் 4.10 அளவில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாடு திரும்பியுள்ளார்.