தாயக உறவுகளுக்கு வலுசேர்த்த நெதர்லாந்து தமிழர்கள்.!

394 0

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டம் 1000 நாட்களை கடந்தும் எந்த ஒரு நீதியும் கிடைக்காத நிலையில் இன்றும் மழை வெயில் என்றும் பாராது வீதியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் உலக நாடுகளும் சர்வதேச அரசும் இன்னும் பாராமுகமாகவே இருக்கின்றது.
புலம்பெயர் மண்ணில் இந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் நோக்குடனும் கைகொடுக்கும் நோக்குடனும் புலம்பெயர் மண்ணில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளால் நெதர்லாந்து மண்ணில் நெதர்லாந்து மக்களவையின் ஏற்பாட்டில் 16-11-2019 சனிக்கிழமை 12.00 மணிக்கு அம்ஸ்ரடாம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக 1000 ஆவது நாளை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

கடும் குளிரிற்கு மத்தியிலும் தமிழ் உறவுகளிற்கு தாயகத்தில் இடம்பெற்ற இன்னல்களையும் இன்னமும் நீதி கிடைக்காது அல்லல்படும் அவலத்தையும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் வெளிநாட்டு மக்களிற்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.