யாழில் 66.58% வாக்கு பதிவு – வாக்களிப்பு குறித்து மாவட்ட அதிபர் தகவல்

204 0

ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்குப் பதிவு 66.58 வீதத்ததை தாண்டியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மத்திய கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், 475,176 பேர் இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். யாழ். மாவட்டத்தில் இன்று மிக சுதந்திரமாகவும் அமைதியாகவும் மக்கள் வாக்களிப்பை மேற்கொண்டிருந்தனர்.

எமது மாவட்டத்தில் 11 வாக்கு எண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். தற்பொழுது, வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துவரப்படுகின்றன.

ஏற்கனவே வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் சில வாக்கெண்ணும் நிலையமாகிய யாழ். மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது

இந்நிலையில், வாக்குப் பெட்டிகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.