மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அ.தி.மு.க. மாறியுள்ளது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

349 0

5 மற்றும் 8-ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அ.தி.மு.க. மாறியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க அரசு அல்ல; பா.ஜ.க அரசு என்கிறோம்.
தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அ.தி.மு.க ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.