ரயிலில் மோதி 4 மாடுகள் பலி

420 0

தலைமன்னாரிலிருந்து இன்று(30) புதன்கிழமை காலை 7.10 மணியளவில் மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளன.

குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று புதன்கிழமை (30) காலை 8.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று  காலை 7.10 மணியளவில் குறித்த ரயில் பயணித்துள்ளது.இதன் போதே மன்னார்-மதவாச்சி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கிசென்றது.

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.