பண்ருட்டியில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

360 0

விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மனைவி பிரியா. இத்தம்பதியின் இரண்டரை வயது மகள் பவளவள்ளி.

பிரியாவின் தந்தை பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசித்து வருகிறார். உடல் நலமில்லாத அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

அவரை பார்ப்பதற்காக மகா ராஜா, பிரியா இருவரும் தங்களது இரண்டரை வயது மகளுடன் நேற்று காலை பண்டரக் கோட்டைக்கு சென்றனர்.

 

குழந்தை பவளவள்ளியை, அங்குள்ள பக்கத்தில் வீட்டில் விட்டுவிட்டு கணவன், மனைவி இருவரும் நேற்று மதியம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அந்த வீட்டில் புதிய கழிப்பறைக்காக செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டப்பட்டிருந் தது. அதில், தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி குழந்தை பவளவள்ளி உயிரிழந்தது.

வீடு திரும்பிய கணவன், மனைவி இருவரும் குழந்தையை காணாமல் தவிக்க, அக்கம்பக்கத் தினரும் சேர்ந்து தேட, செப்டிக் டேங்க் குழியில் குழந்தை இறந்து மிதப்பது தெரிய வந்தது.

உடனே பண்ருட்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக் காக பண்ருட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பண்ருட்டி போலீ ஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர். குழந்தை செப்டிக் டேங்க் குழியில் விழுந்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.